தண்டவாளத்தில் கிடந்த உடல்

மதுரை, பிப்.26: மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் வெயிலுகந்தம்மன் ேகாயில் அருகில் தண்டவாளத்தில் நேற்று காலை 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுகாயத்துடன் ரயில் மோதி இறந்து கிடந்தார். தகவலறிந்த ரயில்வே போலீஸ் எஸ்ஐ ஜெயசீலன் சம்பவ இடத்திற்கு சென்று, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.இறந்தவர் சிகப்பு மற்றும் நீல கலரில் கட்டம் போட்ட ரெடிமேடு முழுக்கை சட்டையும், சந்தன கலர் பேண்ட்டும் அணிந்துள்ளார். இறந்தவர் யார் என ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: