மதுரை: மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவுக்காக வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 500 கன அடி வீதம் 6 நாட்களுக்கு வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்படுவதால் தேனி, மதுரை மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே 1ஆம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர். மதுரை தயாராகிறது.
