துறைமுகம் அமைய சாத்தியம் குறைவுதான்

 கன்னியாகுமரி சரக்கு பெட்டக மாற்றுமுனையம் அமைவது பற்றி முருகனிடம் கேட்டபோது,அருகில் இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் பதில் கூறியதாவது: குமரியில் துறைமுகம் அமைய முயற்சிகள் மேற்கொண்டேன். கொரோனா பாதிப்பு காரணமாக குறைவான நிதி ஒதுக்கீடே அளிக்க முடியும் என்பதால், இந்த திட்டம் சாத்தியமா என்பது தெரியவில்லை. இதுபற்றி சம்மந்தப்பட்ட துறையின் மத்திய அமைச்சரிடம் கேட்டால்தான் தெளிவான விபரம் தெரியும் என்றார்.

கோட்டாறில் மாற்று கட்சியினர் பா.ஜனதாவில் இணையும் விழாவில், பா.ஜனதா கலைப்பிரிவை சேர்ந்த ஜனனி நாராயணன் தயாரித்த, 5 பாடல்கள் அடங்கிய  சி.டியை பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மாநில தலைவர் முருகன் வெளியிட்டார். தொடர்ந்து அந்த சிடியில் உள்ள பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டன.

Related Stories: