கயத்தாறு பிப்,24: உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரிகயத்தாறு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தினர்.மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை 3ஆயிரமாக உயர்த்த வேண்டும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை 5ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஊனமுற்றோருக்கு தனியார் துறையில் 5 சதவீதம் வேலைவாய்ப்புவழங்க வேண்டும், அரசு துறைகளில் அனைத்து பணிநிலைகளிலும் அரசு ஒத்துக்கொண்ட 4 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்துவதை உறுதிபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.போராட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் கருப்பசாமி தலைமை வகித்தார்.