விருதுநகர்: விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் வனஜா பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடி மருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. வெடி விபத்தில் கட்டடங்கள் இடிந்த நிலையில் தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
