பட்டுக்கோட்டை, பிப்.23: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டையில் தாலுகா அலுவலகம் முன் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை தெற்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் ஏனாதி பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி 2 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த நகர, ஒன்றிய, பேரூர் திமுக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் எம்பி, பழநிமாணிக்கம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நகர, ஒன்றிய, பேரூர் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.