×

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி மூலம் அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டுள்ளது: ப.சிதம்பரம் பேட்டி

 

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி மூலம் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டுள்ளது என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; 2024 தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கவே வாக்களித்தனர். திமுக தலைமையிலான கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி பெற்றது; பாஜக கூட்டணிக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை. அரசியல் சாசனத்தைத் திருத்த பாஜகவிற்குப் போதிய பலம் இல்லை என்று மக்கள் நம்பினர். மக்களின் நம்பிக்கைக்கு மாறாக, இரண்டு ஆண்டுகள் கழித்து அரசியல் சாசனத்தைத் திருத்த அரசு முயன்றது.

​இந்தியா (INDIA) கூட்டணி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லியில் ஒருங்கிணைந்து இந்த மசோதாவைத் தோற்கடித்தனர். இதன் மூலம் அண்ணல் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டுள்ளது.​இந்த மசோதா நிறைவேறியிருந்தால் பின்வரும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். ​சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கும். ​வக்ஃபு சட்டம் மற்றும் FCRA (Foreign Contribution Regulation Act) சட்டங்களில் மாற்றங்கள் வந்திருக்கும். ​மக்களின் பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமை நசுக்கப்பட்டிருக்கும். ​தொடர்ச்சியாக மேலும் பல அரசியல் சாசனத் திருத்தங்கள் செய்ய வழிவகுத்திருக்கும் என்று கூறினார்.

Tags : P. Chidambaram ,Chennai ,Former Union Finance Minister ,Ambedkar ,Tamil Nadu ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 148 கன அடியாக சரிவு