சாத்தூர்,பிப்.23: சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் தாய். தந்தையை இழந்த சிறுமி நந்தினியின் படிப்புச் செலவுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தனது சொந்த நிதியில் ரூ.5 லட்சம் வழங்கினார். சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் கடந்த 12ம் தேதி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 21 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில் நடுசுரங்குடி கிராமத்தை சேர்ந்த 4 பேர் பலியாயினர். இந்நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த நடுசுரங்குடியை சேர்ந்த பாக்கியராஜ், செல்வி தம்பதியினருக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயதான நந்தினி என்ற பெண் குழந்தை உள்ளது.