சென்னை: தேர்தல் காரணமாக சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிக்கு மாற்ற கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த ஒரு போட்டியில் எந்த விதிமீறலும் இல்லை என கூறிய நீதிபதிகள், 2வது போட்டியையும் கண்டு ரசியுங்கள் என தெரிவித்துள்ளனர்.

