சீர்காழி அருகே பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

சீர்காழி, பிப்.19: சீர்காழி அருகே மேலையூர் அரசு உதவிபெறும் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. சீர்காழி கல்வி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை ஆய்வாளர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சத்தியமூர்த்தி வரவேற்றார். பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் கலந்து கொண்டு 317 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், பள்ளி தலைவர் ராஜசேகரன், செயலாளர் ராம.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தனர். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பவல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: