- தெவேகாஸ்
- தேசிய சட்டமன்றம்
- Mannachanallur
- தேன்மொழி
- திருச்சி மாவட்டம்
- நாதம் தமிழர் கட்சி
- வலியூர்
- டிவிகே…
- விஜய்
மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுபவர் பேராசிரியர் தேன்மொழி. இவர், நேற்று மாலை வலையூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு அங்கிருந்த இளைஞர்கள் விஜய் பெயரை கூறி “டிவிகே… டிவிகே…’’ என கூச்சலிட்டனர். உடனே வேட்பாளர தேன்மொழி, “அறிவார்ந்த சமூகம், நாம் நன்கு படிக்க வேண்டும்’’ என அந்த இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கி சென்றதாக தெரிகிறது.
இதனை கொஞ்சமும் பொருட்படுத்தாத தவெக இளைஞர்கள், பின்தொடர்ந்து கூச்சலிட்டபடி வேட்பாளர் தேன்மொழியை ‘ஆபாச வார்த்தைகளால் வசைபாடி’ தாக்க முயற்சி செய்ததாக தெரிகிறது. இதனால் பிரசாரத்தில் பாதியிலேயே முடித்துக்கொண்டு தேன்மொழி வீடு திரும்பியபோது தவெகவை சேர்ந்த இளைஞர்கள், வேட்பாளரின் வாகனத்தை வழிமறித்து அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக வேட்பாளர் தேன்மொழி, சிறுகனூர் காவல் நிலையத்தில் தவெக கட்சியினர் மீது புகார் கொடுத்து உள்ளார்.
