×

தாய் தூக்கிட்டு தற்கொலை

சேலம், ஏப்.5: சேலத்தில் புதிய டூவீலர் கேட்டு மகன் கண்டித்ததால் அதிர்ச்சியடைந்த தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் நெத்திமேடு புத்தூர் இட்டேரி ரோட்டை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி சுதா (40). இவர்களுக்கு அருண் (21) என்ற மகன் இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செல்வகுமார் இறந்து போனார். மிகுந்த சிரமத்திற்கிடையே மகனை வளர்த்தார். அருண், டேட்டா என்டரி வேலைக்கு சென்று வருகிறார். அவரது தாயிடம் புதியதாக டூவீலர் ஒன்றை வாங்கித்தருமாறு கேட்டுள்ளார். இருக்கும் வண்டியை வைத்துக்கொள்ளுமாறு கூறிய தாய், பணம் கிடைத்தவுடன் டூவீலர் வாங்கலாம் என கூறியுள்ளார். இதனால் தாயை அவர் கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்துபோன தாய் சுதா, நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் தூங்கிய மகன் எழுந்து பார்த்து, கடும் அதிர்ச்சியடைந்தார். கண்ணீர் விட்டு அழுதார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Salem ,Selvakumar ,Puttur Ittery Road, Nethimedu, Salem ,Sudha ,Arun ,
× RELATED ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா