டெல்லி: சி.ஐ.எஸ்.எப். வீரர் பணி நீக்கம் தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் மேல்முறையீட்டு மனுவை ரூ.25,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஏராளமான வழக்குகள் நிலுவை என பேசுகிறோம், ஆனால் அதிக வழக்குகளை நடத்துவதே ஒன்றிய அரசுதான் என நீதிபதி கூறினார்.
