கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அதிமுக நகர செயலாளர் பாபு ராஜினாமா கடிதம் மாவட்ட செயலாளர் குமரகுருவிடம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கடிதத்தில்; கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஆகிய நானும், எனது மனைவி அழகுவேலு, பாபு, மாவட்ட மகளிரணி தலைவர் ஆகிய நாங்கள் இருவரும், பல்வேறு மன உளைச்சல் காரணமாக கழகத்தில் பணியாற்றிவிட முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் முழுமையாக விலகுகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்,
