வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

புதுக்கோட்டை, பிப்.18:புதுக்கோட்டையில் மகன் வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (18). இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் அவரது பெற்றோர்கள் மகனை வேலைக்கு செல்லும்படி கூறி கண்டித்துள்ளனர். இந்நிலையில் கார்த்திக் நேற்றுமுன்தினம் அப்பகுதியில் ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: