×

ஒட்டத்தட்டை கிராமத்தில் ஏடிடி 59 ரகம் சாகுபடி வயலில் விதை சான்றளிப்பு அதிகாரி ஆய்வு

நாகப்பட்டினம், மார்ச் 27: திருமருகல் வட்டாரம் ஒட்டத்தட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயியின் வயலில் விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மசான்றளிப்பு துறை உதவி இயக்குநர் விஜயா ஆய்வு செய்தார். நாகப்பட்டினம் மாவட்டம் சங்கமங்கலம் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்ற விவசாயி 1 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள விதைப்பண்ணையில் பயிரிட்ட தாளடி ஏடிடி 59 ரக ஆதார நிலையில் உள்ள பயிர் ரகம், திருமருகல் வட்டாரம், கீழையூர் ஒட்டத்தட்டை கிராமத்தில் கமலா என்ற விவசாயி 1 ஏக்கரில் பயிரிட்டுள்ள ஏடிடி 59 ஆதார நிலை நெற்பயிரை விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மசான்றளிப்பு துறை உதவி இயக்குநர் விஜயா ஆய்வு செய்தார். விதைச்சான்றளிப்பு அலுவலர்கள் மாறன், சுஜாதா ஆகியோர் உடனிருந்தனர்.

 

Tags : Gattattai ,Nagapattinam ,Seed Certification and Life Certification Department ,Vijaya ,Tirumarukal Vattataram ,Ravichandran ,Sangamangalam ,Nagapattinam district ,
× RELATED மது பாட்டில்கள் பறிமுதல்