தஞ்சை, பிப்.17: தஞ்சையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலையில் பாத்திமா நகர் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் தனியார் மதுபான கடை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான வேலைகள் முடிந்து திறப்பதாக இருந்தது. இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த மதுபான கடை முன் தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலையில் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த தஞ்சை தாசில்தார் பாலசுப்பிரமணியன் , டாஸ்மாக் தாசில்தார் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் தர் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.