கறம்பக்குடி, பிப்.17: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மருதன் கோன் விடுதியில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இதில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வரும் இக்கல்லூரியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் காலை குறிப்பிட்ட நேரத்திற்கு கல்லூரிக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர் . இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி பேருந்துகள் இயக்கப்பட்டன. இப்பேருந்துகள் ஒரு மாத காலமாக வராமல் நிறுத்தியதை கண்டித்து நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அரசையும் போக்குவரத்து நிர்வாகத்தையும் கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.