டெல்லி: அய்யா பாசறை மக்கள் கட்சி (அய்யா பாமக) என்ற புதிய கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது; பாமக சின்னம் தொடர்பான சிவில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் புதிய கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் ராமதாஸும், வி.கே.சசிகலாவும் துரோக எதிர்ப்புக் கூட்டணியை அமைத்துள்ள நிலையில் புதிய கட்சி உதயம் ஆகியுள்ளது. பாமக, மாம்பழம் சின்னம் முடக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட ஏதுவாக புதிய கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
