சென்னை: சட்டமன்ற தேர்தலை ஒட்டி நாளை முதல் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். நாளை பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை மயிலாப்பூர் பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். மார்ச் 27ல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மார்ச் 28ல் சென்னை, திருவள்ளூரிலும், 29ம் தேதி கன்னியாகுமரி, நெல்லையிலும், 30ம் தேதி தென்காசி, தூத்துக்குடியிலும், 31ல் விருதுநகர், ராமநாதபுரம், ஏப். 1ல் சிவகங்கை, புதுக்கோட்டையில் எடப்பாடி பிரச்சாரம் மேற்கொள்கிறார்
