சென்னை: நான் உறுதியளித்தபடி 2030இல் அதிகரிக்கப்பட்ட பசுமைப் பரப்பும், சீரான நடைப்பாதைகளும், அழகிய பூங்காக்களும் நிறைந்த மாநகரங்களைத் தமிழ்நாடெங்கும் உருவாக்கிக் காட்டுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் ஒருபுறம், பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய, தரமான பேருந்துகள் மற்றும் டிஜிட்டல் பயணச்சீட்டு முறைகள் மற்றொருபுறம் உள்ளது என கூறியுள்ளார்.
