சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அமலாக்க அதிகாரிகள் சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட தண்டையார்பேட்டை பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 9 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு 14,87 லட்சம் இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.