டெல்லி :உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்ச வரம்பு இன்று முதல் நீக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. விமான கட்டணங்களுக்கான உச்ச வரம்பை ஒன்றிய அரசு நீக்கியதால் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை காரணம் காட்டி ஏற்கனவே சில விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை ஏற்றியுள்ளன.
