தேனி, மார்ச் 23: நாளுக்கு நாள் பெருகும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையும், வெட்டப்படும் மரங்களுமே வெப்பம் பன்மடங்கு எகிற காரணமாக இருக்கிறது. வருங்காலத்தில் தென் மாவட்டங்களில் மழை குறைந்து, வெப்பம் அதிகரிக்கும் என்ற அச்சத்தைத் தருகிறது. இதனை கருத்தில் கொண்டு வரும் நாட்களில் அதிகம் மரங்கள் வளர்த்தால் மட்டுமே இந்த வெப்பத்திலிருந்து மக்களை காப்பாற்ற முடியும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
