×

மேற்குவங்க தேர்தலில் தில்லுமுல்லு செய்ய பாஜவினருக்கு பயிற்சி; அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

 

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் லக்னோவில் நேற்று அளித்த பேட்டி: பாஜவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும், அல்லது தேர்தல் ஆணையத்துடன் பாஜக கைகோர்த்தாலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனி ஆளாகப் போராடி வெற்றிப் பாதையில் பயணிக்கிறார். மேற்கு வங்க டிஜிபி, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நீக்கப்பட்டாலும், மக்கள் மம்தா பானர்ஜிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை தரப்போகிறார்கள். உ.பி.யில் நடைபெற்ற முந்தைய தேர்தல்களைப் பாருங்கள். எதாவது ஒரு அதிகாரியை மாற்றியிருப்பார்களா? ஆனால், மேற்கு வங்கத்தில் எந்த அதிகாரியை எங்கு நியமிப்பது என்ற ‘செட்டிங்’ ஏற்கனவே தொடங்கிவிட்டது.

மேற்கு வங்க தேர்தலில் தில்லுமுல்லு செய்வது எப்படி என்பது குறித்து லட்சக்கணக்கான தொண்டர்களைத் திரட்டி, அவர்களுக்கு பாஜவினர் பயிற்சி அளித்து வருகின்றனர். அவர்கள் காவல்துறை, மத்தியப் படைகள் மற்றும் சங்கிகளுக்கு எப்படி பணம் பட்டுவாடா செய்தல், வாக்குச் சாவடிகளை எப்படிக் கைப்பற்றுவது என்பது குறித்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. வங்காளத்தில் ஒவ்வொரு வாக்குச் சாவடி மட்டத்தில் ஏற்கனவே பணம் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால், இதையெல்லாம் மீறி மம்தா பானர்ஜி வெற்றி பெறுவார். இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.

 

Tags : BJP ,West ,Bengal elections ,Akhilesh Yadav ,Samajwadi Party ,Lucknow ,Election Commission ,West Bengal ,Chief Minister ,Mamata Banerjee ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் உதயநிதியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்