சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான சீமானின் முதற்கட்ட பரப்புரை பயண திட்டத்தை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. சீமானின் முதற்கட்ட பரப்புரை பயண திட்டத்தை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை திருத்தணியில் தனது முதற்கட்ட பரப்புரையை தொடங்கி, வரும் மார்ச் 28ம் தேதி வரை திருத்தணி, ராணிப்பேட்டை, வேலூர், சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஆவடி, திருவள்ளுர் உள்ளிட்ட 32 இடங்களில் வாகன பரப்புரை மற்றும் பொதுக்கூட்டம் ஆகிய வடிவங்களில் பரப்புரை செய்கிறார்.
இவ்வாறு நாம் தமிழர் கட்சி அறிக் கையில் தெரிவித் துள்ளது.
