சென்னை: பறவை காய்ச்சல் பரவிவருவதால் சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மூடப்பட்டது. பறவை காய்ச்சல் காரணமாக சிறுவர் பூங்காவில் 20க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்தன. கரண்டிவாயன், கூழைக்கடா, செங்கால் நாரை உள்ளிட்ட நாரைகள், கொக்குகள் உயிரிழந்துள்ளது. சென்னையின் முக்கிய பகுதியில் உள்ள பூங்காவுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருவது வழக்கம்.
