பஸ் மோதி தொழிலாளி பலி

கொள்ளிடம், பிப். 12: கொள்ளிடம் அருகே பன்னீர்கோட்டகம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி பாலச்சந்திரன் (45). இவர் நேற்று சிதம்பரத்தில் இருந்து சீர்காழி சென்ற தனியார் பஸ்சில் பயணம் செய்தார். சீர்காழி செல்லும் வழியில் நல்லநாயகபுரத்தில் சாலையோரம் சில நிமிடங்கள் பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது பாலச்சந்திரன் பஸ்சிலிருந்து கீழே இறங்கி நின்று கொண்டிருந்தார். பின்னர் டிரைவர் பஸ்சை இயக்க ஆரம்பித்தபோது சாலையோரம் நின்றிருந்த பாலச்சந்திரன் மீது மோதியது. இதில் பஸ்சின் சக்கரம் ஏறி பாலச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து பாலச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனு ப்பி வைத்தனர். மேலும் விசாரிக்கின்றனர்.

Related Stories: