தூத்துக்குடி, பிப் 12: தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கியது. கல்லூரியின் செயலர் பெட்ரோ ஜோஸ்வா ஆரம்ப ஜெபம் செய்து துவக்கி வைத்தார். இயற்பியல் துறை பேராசிரியை ஜினிகமல் ஈஸ்ட்ரோ வரவேற்றார். கல்லூரியின் தலைவர் ஜோஸ்வா தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து அறிவியல் துறைத்தலைவர் ஆண்டனிரெக்ஸ் பேராசிரியர்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
கிரேஸ் கல்லூரியின் சார்பில் பிளஸ்2 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடத்திய கிளிக் அண்ட் வின் என்ற பொது அறிவுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரியின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜீவா ஸ்டீபன் பரிசினை வழங்கினார்.