பெரம்பலூர், மார்ச் 17: பெரம்பலூர் தொகுதியில் 2 இடங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ3.10 லட்சம் பணத்தை, நிலையான கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதைத் தொடர்ந்து பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர், பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் 15ம் தேதிமுதல் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
