சென்னை: எஸ்பிஐ வங்கியின் உதவி மேலாளர் ஜிடகாம் வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், எழும்பூர் கிளையில் உள்ள எங்கள் வங்கியில் லோன் வழங்கும் பிரிவில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்த மாதவன், வாடிக்கையாளர் ராமகிருஷ்ணன் கணக்கில் இருந்து 82 லட்சம் கையாடல் செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், லோன் வழங்கும் பிரிவில் உதவி மேலாளராக வேலை செய்து வந்த கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருமைக்காரன் புதூரை சேர்ந்த மாதவன் (35) கடந்த 2013-14ம் ஆண்டு பங்கு சந்தையில் முதலீடு செய்து அதற்கு அடிமையாகியுள்ளார். இதனால் பல இடங்களில் கடன் வாங்கி பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளார்.