8 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

ஆர்.எஸ்.மங்கலம்,பிப்.11:  ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 8 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது. திருவாடானை தொகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம், செங்குடி,ஆனந்தூர், சனவேலி, உப்பூர், திருப்பாலைக்குடி, தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 8 பள்ளிகளின் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா, ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், மாணவ,மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் முத்துசாமி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இந்திராகாந்தி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமாரி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: