கலப்பு மருத்துவ முறைக்கு எதிர்ப்பு பல் மருத்துவ சங்கத்தினர் அறவழி போராட்டம்

மயிலாடுதுறை, பிப். 11: கலப்பு மருத்துவ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் இந்திய பல் மருத்துவ சங்கத்தினர் அறவழி போராட்டம் நடத்தினர். மத்திய அரசு சமீபத்தில் கலப்பு மருத்துவ முறைக்கு அனுமதி வழங்கியது. இந்த மருத்துவ முறைக்கு மருத்துவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கலப்பு மருத்துவ முறைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் இந்திய பல் மருத்துவர் சங்கம் சார்பில் உரிமை மீட்பு போராட்டம் நடந்தது.

நாகை பல் மருத்துவ சங்க செயலாளர் சைப் அன்வர் தலைமையில் 15க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வாயை மூடி மவுனமாக நின்று மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.

Related Stories: