மயிலாடுதுறை, பிப். 11: கலப்பு மருத்துவ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் இந்திய பல் மருத்துவ சங்கத்தினர் அறவழி போராட்டம் நடத்தினர். மத்திய அரசு சமீபத்தில் கலப்பு மருத்துவ முறைக்கு அனுமதி வழங்கியது. இந்த மருத்துவ முறைக்கு மருத்துவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கலப்பு மருத்துவ முறைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் இந்திய பல் மருத்துவர் சங்கம் சார்பில் உரிமை மீட்பு போராட்டம் நடந்தது.