×

நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

 

டெல்லி: நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். ஈரான் – அமெரிக்கா இடையே ஏற்பட்டு வரும் போர் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஈரானில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டுசெல்லும் கடல் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த 7ம் தேதி வீட்டு எரியாவு சிலிண்டர் மற்றும் வர்த்தக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்தன. அதன்படி வீட்டு சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்து ரூ.928க்கும், வர்த்தக சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்து ரூ.2,044க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வர்த்தக சிலிண்டரை பொறுத்தவரை ரெஸ்டாரண்ட், ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள், டீக்கடைகள், பேக்கரி, ஸ்வீட் கடைகள், கேட்டரிங் சேவை, தங்கம் மற்றும் வெள்ளி செய்யும் பட்டறைகள், டைல்ஸ் தொழிற்சாலைகள், கண்ணாடி மற்றும் தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த விலையேற்றத்தால் வர்த்தக சிலிண்டர் கடந்த இரண்டு நாட்களாக தட்டுப்பாடு நிலவி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த ஒன்றிய அரசுக்கு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியில் ஒன்றிய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Tags : Modi ,Delhi ,Iran ,US ,
× RELATED எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விமான கட்டணங்கள் உயர்வு..!!