- பாஜக
- அஇஅதிமுக
- மகாராஷ்டிரா
- பீகார்
- Mutharasan
- விருதுநகர்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- வத்திராயிருப்பு, விருதுநகர் மாவட்டம்
- ஒன்றிய அரசு...
விருதுநகர்: அதிமுகவை விழுங்கும் ஆக்டோபஸாக பாஜக மாறி வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் தெரித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசு மகளிர் தினத்தில் சமையல் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி பெண்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது. சிறுபான்மையின மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரு அரசியல் போராட்டமாகும். ஒன்றிய அரசால் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க அரசுக்கு அடிமை போல் மத்திய அரசு செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.
எடப்பாடி தன்னை காப்பாற்றிக் கொள்ள அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார். பாஜக என்பது ஆக்டோபஸ் போன்றது. கூட்டணியில் சேரும் கட்சிகளை அபகரிக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது. மகாராஷ்டிரா, பீகாரை தொடர்ந்து தமிழகத்தில் அதிமுகவை விழுங்கும் ஆக்டோபஸாக பாஜக மாறி வருகிறது. திமுக தலைமையிலான கூட்டணி 10 ஆண்டுகளாக தொடர கொள்கையே காரணம். இந்த கூட்டணி மேலும் பலப்பட்டு வருகிறது. 22 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் எந்த இழுபறியும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
