சோழவந்தான், பிப். 10: சோழவந்தான் பிரளயநாதர் கோயிலில் நேற்று பிரதோஷ விழா நடைபெற்றது. இதையொட்டி பிரளயநாதர் சுவாம, பிரளயநாயகி அம்மன், நந்தீஸ்வரர், சனீஸ்வர லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடந்தன. பின்னர் ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் கோயில் வலம் வந்தனர். அர்ச்சகர்கள் ரவி, பரசுராம், ஐயப்பன் சிறப்பு பூஜைகளை நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். ஏற்பாடுகளை தக்கார் இளமதி, எம்விஎம் குழும தலைவர் மணி முத்தையா, தொழிலதிபர் வள்ளி மயில், பள்ளி தாளாளர் மருதுபாண்டியன் மற்றும் பிரதோஷ குழுவினர் செய்திருந்தனர்.