ேசலம் ஜோஸ் ஆலுக்காசில் வைர நகைகள் கண்காட்சி 21ம் தேதி வரை நடக்கிறது

சேலம், பிப்.10: சேலம்-ஓமலூர் ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காசில் வைர நகைகள் கண்காட்சி தொடக்க விழா நடந்தது. டி.எம்.எஸ் கண் மருத்துவமனை இயக்குனர் லட்சுமி சித்தார்த்தன் தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் ரெனால்டு பெஞ்சமின், சேலம் மாநகர ஊர்க்காவல் படை ஏரியா துணை கமாண்டர் ஷீபா ரெனால்டு பெஞ்சமின் ஆகியோர்கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இதுகுறித்து ஜோஸ் ஆலுக்காசில் சேலம் மாவட்ட மேலாளர் ஆல்டோ கூறுகையில், ஜோஸ் ஆலுக்காசில் வைர நகைகள் கண்காட்சி வரும் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. 25 சதவீத தள்ளுபடியில் வைர நகைகள் விற்பனை செய்யப்படுகிறது. ₹30 ஆயிரத்துக்கு மேல் வைர நகைகள் வாங்கும் அனைவருக்கும் ஒரு தங்க காசு பரிசாக வழங்கப்படும் என்றார். .

Related Stories: