மதுரை: மதுரையில் அரசு நிகழ்வில் ரூ.4,400 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். மரக்காணம் – புதுச்சேரி பிரிவு தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை கடற்கரை -எழும்பூர் இடையே 4வது ரயில்வே வழித்தடத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பொம்மிடி, மொரப்பூர், திருவாரூர், பொள்ளாச்சி, காரைக்குடியில் மறுசீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைத்தார்.
