×

அம்பேத்கரின் எழுத்துக்கள், பேச்சுக்கள் அடங்கிய ‘அம்பேத்கரியம்’ தொகுப்பு நூல்கள்: முதல்வர் அறிமுகம் செய்தார்

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கவுதம சன்னா, அண்ணல் அம்பேத்கரின் எழுத்துக்கள், பேச்சுக்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றைத் தொகுத்து வழங்கியுள்ள “அம்பேத்கரியம்” நூல் தொகுப்பினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் அறிமுகப்படுத்தினார். அண்ணல் அம்பேத்கரின் எழுத்துக்கள் பேச்சுக்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியன முறையாக தொகுக்கப்பட்டு இவற்றில் இடம் பெற்றுள்ளன. இத்தொகுப்பு முதன் முறையாக தமிழில் வெளிவருகிறது.

மேலும், அண்ணல் அம்பேத்கர் எழுதி நூலாக வெளிவராத \\”ஒதுக்கப்பட்ட மக்கள்\\” மற்றும் அவரின் கடிதங்கள் முதல்முறையாக நூலாக்கம் பெற்று இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, ஜெர்மனி தலைவர் க.சுபாஷிணி, செந்தில்குமார், மருத்துவர் பாலகுமாரன், மாணிக் ராஜேந்திரன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags : Ambedkar ,Chief Minister ,Chennai ,Gautama Channa ,Deputy General Secretary ,Liberation Tigers ,Tamil Nadu ,
× RELATED 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை...