×

திருச்சியில் திரள்வோம்; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம் : அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு

சென்னை : திருச்சியில் திரள்வோம்; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 9ல் திருச்சியில் 10 லட்சம் பேர் கலந்து கொள்ளும் மாபெரும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து மிக பிரம்மாண்டமாக நடத்திட தயாராகிக் கொண்டிருக்கிறோம். திருச்சியில் திரளும் கூட்டம் 2026 சட்டப்பேரைவைத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாய் அமைந்திட வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Trichy ,Model ,government ,Minister ,K.N. Nehru ,Chennai ,
× RELATED சென்னை வளசரவாக்கத்தில் கஞ்சா விற்ற அதிமுக நிர்வாகி மகன் கைது..!!