×

அந்தமானில் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து: நடுக்கடலில் சிக்கிய 7 பேர் மீட்பு

ஸ்ரீவிஜயுரம்: அந்தமானில் 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கடலில் சிக்கித் தவித்த 7 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அந்தமானின் போர்ட் பிளேரில் இருந்து ரங்காட்டுக்கு நேற்று ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் விமானி, 5 பயணிகள் உட்பட மொத்தம் 7 பேர் பயணம் செய்தனர். ஸ்ரீவிஜயபுரத்தில் இருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்ட விமானம் சுமார் 9.30மணியளவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இது குறித்த தகவலின்பேரில் விரைந்த மீட்பு படையினர் கடலில் சிக்கிய 2 விமானிகள் உட்பட மொத்தம் 7 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர். அனைவரும் மாயபந்தரில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Tags : Andaman ,Srivijayuram ,Port Blair ,Rangat ,
× RELATED கண் சிகிச்சைக்காக இம்ரான் கான் நள்ளிரவில் மருத்துவமனையில் அட்மிட்