ஆலந்தூர்: ஆதம்பாக்கம் காந்தி நகர் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ராஜன். பெயின்டர். இவரது மகன்கள் வினோத்குமார் (14), விஷால் (12), இருவரும் ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9 மற்றும் 7 வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் நேற்று தனது நண்பருடன் புழுதிவாக்கம் அன்னை தெரசா நகரில் உள்ள மாநகராட்சி குளத்தில் குளித்தனர். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற விஷால், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி தத்தளித்தான்.