மாவட்டம் முழுவதும் 10 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

கிருஷ்ணகிரி, பிப்.8: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி  அரசு கேபிள் டிவி தனி தாசில்தாராக பணியாற்றி வந்த தெய்வநாயகி, அஞ்செட்டி தாசில்தாராகவும், போச்சம்பள்ளி தாசில்தாராக பணியாற்றி வந்த ஆஞ்சநேயலு,  ஊத்தங்கரை தாசில்தாராகவும், ஊத்தங்கரை தாசில்தாராக பணியாற்றி வந்த  தண்டபாணி, தேன்கனிக்கோட்டை தாசில்தாராகவும், கிருஷ்ணகிரி தனி தாசில்தாராக (சிவில் சப்ளை) பணியாற்றி வந்த சத்யா, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியரின்  நேர்முக உதவியாளராகவும், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக  உதவியாளராக பணியாற்றி வந்த சின்னசாமி, ஓசூர் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், ஓசூர் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரக  பணியாற்றி வந்த ரமேஷ், கிருஷ்ணகிரி தனி தாசில்தாராகவும் (சிவில் சப்ளை),  ஓசூர் தாசில்தாராக பணியாற்றி வந்த செந்தில்குமார், கிருஷ்ணகிரி  தாசில்தாராகவும், அஞ்செட்டி தாசில்தாராக பணியாற்றி வந்த குமரவேல்,  போச்சம்பள்ளி தாசில்தாராகவும், தேன்கனிக்கோட்டை தாசில்தாராக பணியாற்றி வந்த  ராமச்சந்திரன், ஓசூர் தாசில்தாராகவும், கிருஷ்ணகிரி தாசில்தாராக பணியாற்றி  வந்த வெங்கடேசன், கிருஷ்ணகிரி தனி தாசில்தாராகவும் (அரசு கேபிள் டிவி)  பணியிடமாற்றம் செய்து, உடனடியாக பணியில் சேர கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: