நாகர்கோவில்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய(இஸ்ரோ) தலைவர் சிவன், நாகர்கோவிலை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த இரு நாட்களுக்கு முன் தனது சொந்த ஊரான நாகர்கோவில் அருகே சரக்கல்விளையில் உள்ள வீடு மற்றும் கோயில்களுக்கு வந்திருந்தார். நேற்றும் அவர் நாகர்கோவிலில் தான் இருந்தார். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகைக்கு சிவன் வந்து இருந்தார். அவரை மாவட்ட கலெக்டர் அரவிந்த் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதியும் உடன் இருந்தார். சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் இந்த சந்திப்பு நடந்தது.