அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

ஓமலூர், பிப்.4:ஓமலூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரமேஷ், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம், ஓமலூர் நகர பொறுப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்பிரசன்னா, மாவட்ட கவுன்சிலர் அழகிரி, ஒன்றிய கவுன்சிலர்கள் சிவஞானவேல், தேன்மொழி தனசேகரன், செல்விராஜா, துரைசாமி, மாவட்ட பிரதிநிதிகள் பெருமாள், ஜெயவேல், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் உலகு, ரமேஷ், பேரூர் அவைத்தலைவர் தேவராஜன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: