ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட 17 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. நலிவடைந்து வரும் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத்துறையை மீட்க, மூடப்பட்ட சுற்றுலாத் தலங்களை திறக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
