சென்னை: பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உதவும் வகையில் தோழி என்ற திட்டத்தை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.சென்னை மாநகர காவல் எல்லையில் 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த காவல் நிலையங்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 10க்கும் மேற்பட்ட பாலியல் தொந்தரவு, பாலியல் பலாத்காரம் புகார்கள் வருகிறது. புகாரின்படி அனைத்து மகளிர் போலீசார் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று மன ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கிடவும், பாதிக்கப்பட்டவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ பாதுகாப்பு வழங்கிட மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி தோழி என்ற திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
பாலியலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்களுக்கு உதவ மாநகர காவல்துறை சார்பில் தோழி திட்டம் தொடக்கம்: போலீஸ் கமிஷனர் துவக்கி வைத்தார்
- வெளியீட்டு
- பெருநகர போலீஸ்
- பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உதவுங்கள்
- பொலிஸ் ஆணையாளர்
- செக்ஸ்