×

தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித் தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் வாழ்க : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள்

“தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்; நானே மரமாக வளர்த்து வருகிறேன்” எனத் தம் தமிழ்ப்பணியை மதிப்பிட்டார் பாவாணர்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தைத் தம் வாழ்நாள் கடமையாக எண்ணி உழைத்தார்.

இந்திய மொழிகளிலேயே வேறு எம்மொழிக்கும் இல்லாத சிறப்பாகத் தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிழர் பாவாணர் வாழ்க!”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Devaneya Bhavanan ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Tamil Nadu ,M.U. K. ,Stalin ,Moshyanayu ,Devanayab Bhavanar ,Bhavani ,Bhavanan ,
× RELATED தரகம்பட்டி, குருணிகுளத்துப்பட்டி...