சிவகாசி, பிப். 3: சிவகாசி நகராட்சிக்குட்பட்ட விசாலாட்சி நகர், நேசனல் காலனி, காரனேசன் காலனி பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை ரோட்ரோம் நகராட்சி ஊழியர்கள் கொட்டி செல்கின்றனர். இதனை சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் எப்போதும் புகை மண்டலமாகவே உள்ளது. அருகில் பெண்கள் கல்லூரி உள்ளதால் அவ்வழியே செல்லும் மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். தவிர குப்பை கழிவுகள் எரிந்து கொண்டே இருப்பதால் கல்லூரி வாளகத்திற்குள் புகை பரவி மாணவிகளுக்கு மூச்சு திணறல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இச்சாலை வழியாக வாகனங்களில் கடந்து செல்வோரும புகை மண்டலத்தால் முகத்தை மூடி கொண்டு செல்லும் அவலம் உள்ளது.