கோலாலம்பூர்: மலேசியாவில் மின்னணு கழிவுகள் கொட்டப்படுவதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பணிக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைவர் அஸாம் பாகி தெரிவித்தார்.அஸாம் பாக்கி வெளியிட்டுள்ள ஓரு அறிக்கையில் மின்னணுக் கழிவுகள் இனி நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படாது.
இது அனைத்து ஏஜென்சிகளையும் உள்ளடக்கிய கடுமையான அமலாக்கத்துடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மின்னணு கழிவுகள் இறக்குமதிக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதை சுற்றுசூழல், நுகர்வோர், ஆதரவு குழுக்கள் வரவேற்றுள்ளன.
